தேனி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளராக நடராஜன்(56) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 லிட்டர் டீசலை கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இவர் டீசலுடன் வந்ததை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது நடராஜன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் […]
