கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்தால் 1311 தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்து வயிற்றில் அடித்திருப்பது அப்பட்டமான பச்சைத் துரோகமாகும். ஒரே அரசின் கீழ், ஒரே […]
