தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து 1 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் குளியாடா, தேவர்நத்தம், மாவள்ளம், ஓசட்டி, அரேபாளையம் ஆகிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் […]
