திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]
