பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் […]
