பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்றும், முறையாக வழங்க […]
