தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாலே ஏற்படுகின்றது. இந்த நிலையில் தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. மேலும் விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதனால் பல இடங்களில் புதிய சாலை ஓரத்தில் விற்பனையாளர்கள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஹெல்மெட் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. […]
