மயில்களை வேட்டையாடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகில் வாழ்வார்மங்கலத்தில் குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை பொழுதில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்த வாழ்வார்மங்கலம் பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அதில், 2 பேர் […]
