திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விளாபூஜை 4.30 மணி அளவில் […]
