கோவை மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், திராவிட இயக்கம்தான் தமிழ் மொழிப் பற்றை தனக்குள் வைத்தது. தமிழர்களாகிய நமக்கு தமிழ்மொழி மிக முக்கியமானது. இருந்தாலும் ஆங்கிலத்தை நாம் அரவணைக்க விட்டால் இந்தி உள்ளே நுழைந்துவிடும். நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகின்றதோ அதனை நாம் கற்றுக்கொள்வது அவசியம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு போனால் யாரும் சொல்லவே தேவையில்லை. எனவே […]
