கம்பீரத்தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானையை காடுகளின் பாதுகாவலன் என்று அழைப்பர். இயற்கைக்கும், மனிதனுக்கும் ஒரு உன்னத தோழனாக யானை விளங்குகிறது. வளமான வனங்களுக்கு ஆதாரமாக விளங்கும் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 12-ந் தேதி அதாவது இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு. (1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர் (2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம் (3) துடியடி […]
