நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவர்களை மனித கடவுள் என்றும் அவர்களுக்கு என்னுடைய நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் கூறியதாவது; நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல் துறை, செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப்ஸ், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி கூறுகிறேன். அவர்களுடைய உயிர், அவர்களுடைய வாழ்க்கை, குடும்பம் என்பதை யோசிக்காமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியில் வந்து அவர்களுடைய சேவையை செய்கின்ற […]
