தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பலரும் தமிழ் வழியில் படித்த சான்றிதழை அவர்கள் படித்த பள்ளிகளில் சென்று […]
