தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்களுக்கு 20% இடஒதுக்கீடு பொருந்தாது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமனம் செய்ய வேண்டும் […]
