கரூர் மருத்துவக்கல்லுரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை […]
