Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. அராஜகம் செய்யுறாங்க… முக்கிய முடிவு எடுத்த ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000, ரூ.2000 சும்மா போடுறீங்க…. தமிழக அரசு தப்பிக்க முடியாது… எச்சரிக்கும் கம்யூனிஸ்ட் …!!

தமிழகத்தில் அதிகமான மின்சார கட்டணம் வசூலிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் அதிகம் வசூல் செய்யப்படுகின்றது என திமுக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,  மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளை; தமிழக அரசு தப்பிக்க முடியாது என்ற தலைப்பில், அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் போட்டோ…. கூண்டோடு சிக்கிய மாப்பிளை வீட்டார் …!!

நிச்சயிக்கப்பட்ட பெண் குறித்து வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளைக்கு அனுப்பப்பட்ட கடிதம் – புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் உள்ள கேசவன்புரம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது இளம்பெண் தக்கலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெட்டூர்ணிமடம் எம்.எஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் எபனேசர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக பணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15,762 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 19,826 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 861 பேர் டிஸ்சார்ஜ்; 12 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 232ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 861 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 19,809ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தல் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,60,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.500 கேட்குறாங்க… என்ன சொல்லுறீங்க ? பதில் சொல்லுங்க… நீதிமன்றம் கேள்வி …!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மீன்பிடி தடைக் காலத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் மீனவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனியும் விட்டு வைக்க கூடாது…. கொரோனாவுக்கு சாட்டையடி…. EPS எடுத்த அதிரடி முடிவு …!!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய நிலையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களை ஐந்தாக பிரித்து மூன்று மண்டலத்திற்கு  ஒரு அமைச்சர் என இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில், ஜெயக்குமார், கேபி அன்பழகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மங்காத்தா சூதாட்டம் … ”ஷாக்”ஆகி கொந்தளிக்கிறாங்க … எச்சரித்த ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷாக்: கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை  என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள். நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி […]

Categories
அரசியல்

ஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு …!!

ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலன் விசாரிக்கின்றார். சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அன்பழகனுக்கு  என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது ? அரசின் சார்பில் என்னென்ன மாதிரியான உதவிகள் வேண்டும் ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாசம் கொடுங்க… ”ஏமாற்றம் தான் மிஞ்சியது” கெத்தான கோரிக்கை வைத்த ஸ்டாலின் …!!

பேரிடர் கால சலுகை என மின் சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டணம் நடிகர் பிரசன்னா தெரிவித்த கருத்துக்களை  சுட்டிக்காட்டியுள்ள முக.ஸ்டாலின் நான்கு மாத மின் நுகர்வு இரண்டு மாதமாக பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின்நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்பத்திற்கு ஆளாகி இருப்பது கண்டனத்துக்குரியது. மின்கட்டணத்தில் முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படிப்போடு…! ”சரியான நேரத்தில், செமையான உத்தரவு…. அதிரடி காட்டிய எடப்பாடியார் …!!

முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் வேகமாக […]

Categories
அரசியல்

ரூ. 10,21,80,599 வசூல்…. ”மாஸ் காட்டிய தமிழக போலீஸ்” மொத்தமாக அள்ளியது …!!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறியவர்களிடம் அபராதமாக 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மீறியதாக இதுவரை 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 ரூபாய் அபராதம் விதித்து தமிழக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளதாக  தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதுவரை ஊரடங்கை மீறியதாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 […]

Categories
அரசியல் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையே குஷியான செய்தி…!” நிம்மதி அடைந்த ஸ்டாலின்” உற்ச்சாகத்தில் உப்பிக்கள் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் திக் திக் ….. ”மரணத்தின் பிடியில் சென்னை” காலையே 7 பேர் மரணம் …!!

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றதை போல, உயிரிழப்பும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி மக்களை நடுங்கச் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த மேலும் 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் மாலையில் தான் கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ட்விட் போட்ட ஸ்டாலின்…! ”களம் இறங்கிய எடப்பாடி” ரெண்டு பேரும் மாஸ் தான் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுவது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது: கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மூன்று மாதமாக எதிர்க்கட்சியின் கடுமையான அரசியல் வார்த்தை போரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து, பலமுறை பதிலளித்து  கொரோனா யுத்தத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திமுக விமர்சனம் தெரிவித்தது. இது சரியில்லை, அது சரியில்லை, இதை இப்படி செய்யுங்க, […]

Categories
அரசியல்

டாப் டக்கரான தமிழ்நாடு…! ”நேற்று மட்டும் செம மாஸ்” இந்தியாவிலே நாம தான் …!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டுபுடிச்ச ஸ்டாலின்…! ”நொந்து போன அதிமுக” கதறும் எடப்பாடி …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவு இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவருக்கும் தானாக அச்சம் ஏற்படும் வகையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து,  நாட்டிலேயே அதிகமானோரை குணப்படுத்தியும் மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 14 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் […]

Categories
அரசியல்

இப்படி போயிட்டு இருந்தா என்ன ஆகுறது ? வேதனையில் புலம்பும் எடப்பாடி …!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்யவும் இல்லை…. சொல்லவும் இல்லை…. சந்தேகமா இருக்கு…. ஸ்டாலின் காட்டமான அறிக்கை …!!

வீடு, வீடாக பரிசோதனை செய்து சென்னையை காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று திமுக தலைவர் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256; சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர். ராயபுரம் மண்டலம் – 3224 ; தண்டையார்பேட்டை மண்டலம் – 2093 ; கோடம்பாக்கம் மண்டலம் – 2029 ; தேனாம்பேட்டை மண்டலம் – 2014 ; திருவிக நகர் மண்டலம் – 1798 ; […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

OK சொன்ன தமிழக அரசு…. வாபஸ் பெற்ற மருத்துவர்கள்…. ஹேப்பி ஆன எடப்பாடி ..!!

தமிழகத்தில் நாளை மருத்துவர்கள் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டம் நடைபெற இருந்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க கோரிக்கையும் விடுத்து போராட்டம் நடைபெற இருந்த நிலையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வீடு வீடா போங்க… இது தான் உங்க லட்சணமா ? பொங்கி எழுந்த ஸ்டாலின் …!!

சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடுவீடாக பரிசோதனை செய்ய வேண்டும்.சென்னையில் ஐந்து மண்டலங்களில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில பாதிப்பை விட சென்னை பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா ? கேரளா, அசாம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 வாங்கிக்கோங்க….! ”மாஸ் உத்தரவு போட்ட எடப்பாடி” மெர்சலான மாணவர்கள் …!!

தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இக்கட்டான சூழலில் நடத்த வேண்டாம் என்றும், இதனை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பல்வேறு  பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல …. 5ஆவது நாளாக…. மிரட்டும் கொரோனா… பதறும் தமிழ்நாடு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக மக்களை பதற வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த 4 நாட்களாக ஆயிரத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் கதிகலங்க வைத்த நிலையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

டக்குனு…! ”உடைச்சிட்டு வாறாங்க” அலேக்கா தூக்கிடுவோம் – எச்சரித்த ராதாகிருஷ்ணன் …!!

தமிழகத்தில் இறப்பை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS கூறுகையில், ஒரு நபரிடம் இருந்து உடனே 10 பேருக்கு கொரோனா பரவுற மாதிரி ஒரு சவால் இருக்கும் போது, இப்போ என்ன வழி ? நம்ம மருத்துவ வல்லுனர்கள் என்ன சொல்றாங்கன்னா ? கொரோனா பாதிக்கப்பட்டவரை உடனே கண்டறிய வேண்டும். அவுங்க குடும்பத்தில் இருப்பவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

முதல்வர் சொன்னாங்க…! ”ஒரு மாசம் அப்படி இருங்க” கண்டிப்பா கட்டுப்படுத்தலாம் …!!

முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட  நேற்று வரை 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். பொதுமக்களிடம் நாம் இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தினமும் எண்ணிக்கை கூடும் போது அச்சம் ஏற்படுகின்றது. சென்னையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் – அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே …!!

சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் முன்பதிவு நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், சென்னை பீச,  திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் 12ம் தேதியிலிருந்து  பணத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சொல்லி பார்த்தோம், யாரும் கேட்கல… அதான் இப்படி முடிவு எடுத்தோம்… அதிரடி காட்டிய தமிழக அரசு …!!

இனிமேல் வீடுகளில் தனிமைபடுத்துவது கிடையாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000யை தாண்டிய நிலையில் உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகியது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 25,872ஆக உயர்ந்து உயிரிழப்பு 200யை தாண்டியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 17,587ஆக இருக்கும் நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வீடு கிடையாது முகாம் தான் ….. சாட்டையை சுழற்றிய சென்னை …!!

சென்னையில் வீட்டில் தனிமைபடுத்தப்படும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் பல்வேறு முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சென்னையில் வீட்டில் தனிமைப் படுத்தப் படுவது அல்லது கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுவது ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில்  தடையை மீறி, பாதுகாப்பு இல்லாமல் வெளியே […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாசத்துக்கு கொடுங்க…! ”உத்தரவு போட்ட கோர்ட்” புதுவை மக்கள் மகிழ்ச்சி …!!

புதுச்சேரியில் மூன்று மாதத்துக்கு அரிசி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து  முதல்வராக இருக்கின்ற நாராயணசாமி வழக்கு தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு, நாராயணசாமி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா காரணமாக இலவச அரிசி கொடுக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 11 நாளில் பொதுத்தேர்வு……! 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா ….!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி பொது முடக்கத்திற்கு முன்னர் சென்னை திரும்பியுள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக இருப்பதால் அவர்கள் இ – பாஸ் எடுத்து மாணவியும், அவரது தாயாரும் ஒரு வாகனத்தில்  கொடைக்கானல் திரும்பி உள்ளனர். அவர்களை கொடைக்கானலில் கொரோனா சோதனை செய்தபோது அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், தனிமைப்படுத்தி ஒருநாள் கழித்து மருத்துவர்கள் பரிசோதனை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் என்பது இன்று வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இணையதளம் மூலமாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மாணவர்கள் அவர்கள் பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகி இருக்கிறது. http://www.dge.tn.gov.in/  என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா கட்டணம்: 10 நாளுக்கு ரூ. 2,31,820…. 17 நாளுக்கு ரூ 4,31,411…!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என  IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சை கொடுக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தத்த்து. கட்டணத்தை அரசு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டனர். இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு ?

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என  IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உத்தரவு என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14,316 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 17,598 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் – 114 4. திண்டுக்கல் -147 5. ஈரோடு – 74 6. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்த 11 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி 200ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 610 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,316ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 610 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 14,316 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.33% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,244 பெருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 17,598ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திக்திக் தலைநகர்….! ”இல்லாத உச்சம் தொட்ட கொரோனா” கலங்கிய சென்னை …!!

தமிழகத்தில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் உயிரிழப்பும், இரட்டை இலக்கத்தில் பதிவாகியது மக்களை  செய்வதறியாது திகைக்க வைத்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது நாளாக இன்றும்  கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியள்ளதை போல உயிரிழப்பும் இரட்டை இலக்கை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த 1244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 3 மாசம் நீங்கதான்…! ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு ….!!

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் என்பது மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. வருகின்ற 31.07.2020ஆம் தேதியோடு தலைமைச்செயலாளரின் பதவிக்காலம்  முடிவடைகின்றது. இந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்களை எப்போது திறக்கலாம் ? தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் வழிபட்டு தளங்கள் திறப்பது குறித்து சமய தலைவருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். வருகின்ற எட்டாம் தேதி முதல் கோவில்கள் வழிபாட்டுத் தளங்களை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து சமய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை  நடத்த தலைமை செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 8ஆம் தேதிக்கு பிறகு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்கும் போது ஏற்படக் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்” – தமிழக அரசு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இறுதித் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கான ஒரு தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல்

Superனு அவுங்களே சொல்லி இருக்காங்க- நீங்களே புரிஞ்சுக்கோங்க… எடப்பாடி பெருமிதம் …!!

அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் கொரோனா பரவல் நம் கட்டுப்பாட்டுக்குள்  இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்லா இருக்குன்னு அவுங்களே சொல்லி இருக்காங்க, இது பாராட்டுக்குரியது தான. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அதிகமாக எண்ணிக்கையில டெஸ்ட் பண்ணனும். இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பரவக் கூடியது.  சாதாரண மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டுட்டார் – பொளந்து கட்டிய எடப்பாடி …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் PCR பரிசோதனை கருவிகள் குறைவாக இருக்கின்றது, அது என்ன ? என்பதை முதல்வர் தெரிவிக்கவேண்டும், முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றசாட்டுவுக்கு தமிழக முதல்வர் மாஸ்ஸாக பதிலளித்து அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வென அடுக்கினார். அதிலும் குறிப்பாக முக.ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு விமர்சனகளுக்கு பதிலடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரல் கொடுத்தோம்… மே கொடுத்தோம்…. ஜூன் கொடுத்தோம்…. அடுக்கிய முதல்வர் ….!!

தமிழகத்தில் உணவு பிரச்சனைக்கு இடமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்தஆலோசனைனிக்கு பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னைக்கு முழுமையாக கிடைக்கின்றது. சென்னை மாநகரை பொறுத்தவரை பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படுகின்ற உணவு பொருட்கள் தங்கு தடை இல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் அரசி வாங்குகின்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படியும், அப்படியும்….! ”ஹாட்ரிக் போட்ட கொரோனா” தமிழகத்தை சாய்தது …!!

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 3 இலக்கத்திலும், உயிரிழப்பு இரட்டை இலகத்திலும் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 24,586ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,595ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 13706 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் 10680 பேர் மருத்துவமனையில் […]

Categories
அரசியல்

அதிகமா வசூலிக்கிறாங்க….! ”நீங்க என்னனு கேளுங்க” நீதிமன்றத்தில் வழக்கு …!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜி ராஜேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 22 அரசு மருத்துவமனைகளையும், 112 தனியார் மருத்துவமனைகளையும் அரசு அனுமதித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் இது தொடர்பான உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு 4, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 6000 ரூபாய், […]

Categories
அரசியல்

சரியான முறையில் போறது தான் காரணம் – முதல்வர் பெருமிதம் …!!

சரியான முறையில் சிகிச்சை அளிப்பதன் காரணமாக அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிகமான  பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நாளொன்றுக்கு 13,000 பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் 4000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகின்றது. யாருக்காவது பரிசோதனையில் தொற்று  இருக்கின்றது என்று கண்டறியப்பட்ட உடன் அவர்கள் யார் யாராரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்த படுகிறார்கள். குணமடைந்தவர்கள் வீதம்: […]

Categories

Tech |