Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை-மகன் சித்ரவதை மரணம் – மேலும் ஆதாரங்கள் கிடைத்தன ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் கே.ப.அன்பழகனுக்கு கொரோனா – மியாட் மருத்துவமனை தகவல் …!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் ஆரம்பத்தில் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும்,   அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவர் உடல்நிலை நார்மலாக இருந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருக்கணு என்று சொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அமைச்சருக்கு குறைந்த அளவு இருமல் இருந்ததாகவும் இதனால் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: பெண் காவலரிடம் நீதித்துறை நடுவர் மீண்டும் விசாரணை …!!

சாத்தான்குளம் தந்தை, மரணம் தொடர்பாக பெண்காவலரிடம் மீண்டும் நீதித்துறை நடுவர் விசாரணை செய்து வருகின்றார். சாத்தன்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்தரவதையால் மரணம் அடைந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த இருவரும் மரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது …!!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லத்தியை எங்கே ? சுவர் எகிறி குதித்து ஓடிய காவலர்…. மாஜிஸ்ட்ரேட் அறிக்கையில் தகவல் …!!

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்தது தொடர்பாக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாக இருக்கக்கூடிய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை எடுத்ததற்கு பிறகு இதில் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருந்தார். அறிக்கை தாக்கல்: நீதித்துறை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் மரணம் – டி.ஐ.ஜியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை  நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள்,  நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிர்ச்சி – விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் … பெண் அதிகாரி வாக்குமூலம் …!!

சாத்தான்குளம் மரண வழக்கில் காவல்துறை நிகழ்த்திய கொடூரம் தற்போது அம்பலமாகியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது,  நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ்சுக்கு நடந்த துயரம் குறித்து சாட்சியங்கள் சொல்லிய வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்… 16 கோடி ரூபாயை தாண்டிய அபராதம்… போலீசார் அதிரடி..!!

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இதுவரை 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் வசூலானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையின்றி மக்கள் வெளியில் வருவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தும் கைதுசெய்தும்  தண்டனை கொடுத்து வந்தனர். இந்நிலையில் 98 நாட்களை ஊரடங்கு கடந்த நிலையில் தடை உத்தரவை மீறியதாக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு : ”சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு” ஐகோர்ட் கிளை அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மூன்று விஷயத்தை முக்கியமாக தெரிவித்திருந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ்  உடலில் அதிக காயம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை சரக டிஐஜி அல்லது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி எஸ்.பி மாற்றம் – சாத்தான்குளம் சம்பவத்தால் அதிரடி நடவடிக்கை …!!

தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்பி ஆக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பி ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைதாகி நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் சாத்தான்குளம் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு : தப்பு நடக்க இது தான் காரணம்…. OMG போலீசுக்கு ஆதரவாக தமிழக அரசு….!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் போலீசுக்கு ஆதரவாக காவல்துறையினர் பதிலளித்துள்ளனர். சமீபத்தில் தமிழகத்தையே ஒருபுறம் கொரோனா பாதிப்பு சோகத்தில் ஆழ்த்த, மற்றொருபுறம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொல்லி ஒரு நாள் ஆச்சு… ”செய்து காட்டிய எடப்பாடி” மாஸாக உயரும் இமேஜ்

சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கினை தமிழக அரசு CBI விசரணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. கடந்த 19 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகனான இருவரும் ஊரடங்கை உத்தரவை மீறி நேரத்தை தாண்டி கடை நடத்தி வந்ததாக கூறி இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த வழக்கில் கோவில்பட்டி கிளை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு… தமிழக அரசு அரசாணை வெளியிட்டது …!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட போது மரணமடைந்ததை தொடர்ந்து வழக்கு தற்போது நடைபெற்று வந்தது. அந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு உள்துறை அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தாலும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்…. ஸ்கோர் செய்த எடப்பாடி… ஹீரோவாக மாறினார் …!!

சாத்தான்குளம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

#BREAKING: தந்தை மகன் மரணம் : ”வழக்கு சிபிஐக்கு மாற்றம்” அரசாணை வெளியீடு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்த மரணத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ வசம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …!!

பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், பிறகு மே 17ஆம் தேதி வரையும், பிறகு ஜூன் ஒன்றாம் தேதி என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7ஆவது முறையாக…. வேற வழி தெரியல…. இதான் முடிவு….. வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் பொதுமுடக்கம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது  பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,141ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,212 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,749ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.38% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 2,167 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு 55,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – 187, திருவள்ளூர் – 154, வேலூர் – 144, திருச்சி – 87, காஞ்சிபுரம் – 75, விருதுநகர்- 77, கள்ளக்குறிச்சி – 68, கோவை – 65, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பொதுமுடக்கம் நீட்டிப்பு ? வெளியாக போகும் அறிவிப்பு…!!

பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ள இருப்பதாகவும்,  இன்று மாலைக்குள் அதை அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.  ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய கள நிலவரத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொரு மாவட்டமும் எப்படி இருக்கு? நிலவரங்களுக்கு ஏற்ப ஊரடங்கு …!!

தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா ? போன்ற  விவாதங்கள் எழுந்த நிலையில் தற்போது ஊரடங்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரையா ? ட்விட் மூலம் கசிந்த தகவல் …!!

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட் செய்துள்ளார். ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவரான பிரதீப் கவுர் தற்போது போது ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவில் அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை பொறுத்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல மருத்துவ நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் பார்த்தோமென்றால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: துணை முதல்வரின் சகோதரருக்கு கொரோனா – அதிமுகவினர் அதிர்ச்சி …!!

தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் உயிரிழப்பு : நீதிபதிகள் விசாரணை !

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!

சாத்தான்குளத்தில் காவலர்கள் சித்தரவதையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வணிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நியமித்து எஸ்.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

8 வயதில் இத்தனை திறமைகளா? ஆச்சரியப்பட வைக்கும் சகலகலாவல்லவி லத்திகா!

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல இடைவெளியின்றி கோர்வையாக பேசிக்கொண்டிருக்கும் லத்திகா ஸ்ரீ… திருக்குறள், குறிஞ்சி பாடலில் வரும் பூக்களின் பெயர்கள் என ஒவ்வொன்றாக உச்சரிக்கும்போது அதன் தமிழ் வாசத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளும் படையெடுக்கத்தான் செய்கின்றன… எந்த பொருளைக் கண்டாலும் குழந்தைகளின் மனதில் ஆசை துளிர்விடும். அதனைத் தனதாக்கிக்கொள்ள அவர்களின் மனம் போராடும். அப்படித்தான், லத்திகா என்ற சிறுமியின் மனதிற்குள்ளும் நிறைய ஆசைகள் துளிர்விட்டன. பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சசீந்திரன், தனம். சசீந்திரன் துறையூரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரூர், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 35 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1 ½, குழந்தை ,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 53,762ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி – 169, திருவண்ணாமலை – 142, கோவை – 32, அரியலூர் – 3, கடலூர் – 39,தருமபுரி – 7,திண்டுக்கல் – 5, ஈரோடு – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டாலின் வீட்டுக்குளேயே இருக்கின்றார்…. நாங்கள் அப்படி கிடையாது … தமிழக முதல்வர் பதிலடி …!!

திமுக சார்பில் அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். இன்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, திமுக தலைவர் என்ன செஞ்சுட்டு இருக்காரு. தினமும் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் செய்வதற்காக அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக என்ன அறிக்கை விட்டார். நோய் பரவலை எப்படி தடுக்க முடியும் ? நோய் வந்தால் எப்படி குணப்படுத்த முடியும் ? என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா ? தினம்தோறும் அரசை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு – சிபிஐக்கு மாற்ற முடிவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

சேலம் தலைவாசலில் தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் மரணம் : நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது – பாஜக அறிக்கை

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர்  வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்.  இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஜாதி, மத, பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டன குரல் எழுப்புகிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பது, பிரேத பரிசோதனைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.64 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரதில் கொரோனாவுக்கு 18மாத குழந்தை உயிரிழப்பு ….!!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,025 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 44,094  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டதில் […]

Categories
மாநில செய்திகள்

3 வழக்கு 3 நீதி…..! காவல்துறை ஹீரோவா ? வில்லனா ?

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையை வில்லனாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டப்படுவதாக ஆதங்கம் எழுந்துள்ளது. அதேநேரம் காவல்துறையினருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறை ஹீரோவா ? வில்லனா என்பது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். காவல்துறை மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ இப்போது மீண்டும் […]

Categories
அரசியல்

சும்மா நினைக்காதீங்க…. இதுலாம் அசாத்தியமானது… நேரில் கண்காணிக்கின்றார் …!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் . அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தக்கூடிய பணிகளை தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் அரசு சிறப்பாக செய்து வருகின்றது. எல்லா மாவட்டத்துக்குமே  மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக செல்கிறார். கோயமுத்தூர், திருச்சியில் ஆய்வு செய்தார். இன்று மதுரையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர்கள்,  மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன், சுகாதாரத்துறை இணை இயக்குனர்,  மாநகராட்சி ஆணையர் நான் […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 68 பேர் உயிரிழப்பு… 1,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 68 பேரில் 8 பேருக்கு உடலில் வேறு எந்த நோயும் இல்லை என தகவல் வெளியாகியள்ளது. இன்று 2,737 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,097ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 51,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,939, மதுரை – 218, செங்கல்பட்டு – 248,வேலூர் – 1118, திருவள்ளூர் – 146, திருவண்ணாமலை – 127, அரியலூர் – 4, கோவை – 3, கடலூர் – 11, தருமபுரி – 4, […]

Categories
அரசியல்

பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் – முக ஸ்டாலின் அறிக்கை..!!

பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் TANFINET என்ற பெயரில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டது. குறைகளை கலைந்த பிறகும் மறு டெண்டர் விடவும் பரிந்துரைத்துள்ளது. […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

2 நாளில் சொல்லுறோம்…! ”இப்போதைக்கு முடியாது” குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது ? ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்த பர்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தாக்கத்தால் மார்ச் முதல் மாதத்திலேயே மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்தில்தான் கொரோனாவில் உடைய வீரியம் அதிகரிக்கும் என்று அரசு கூறி வருகின்ற நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் பளீச் பதில் …!!

தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். கொரோனாவில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் பேசி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார் பல்வேறு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படுமா ? என்பது குறித்து எழும்பூர் கண்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாரத்நெட் : ”முதல்வர் பதிலளிக்க வேண்டும்” முக.ஸ்டாலின் அறிக்கை ..!!

பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரதம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

108 முறை சொல்லுங்கள்….! ”ஓம் நமோ நாராயணாய” கொரோனா ஒடிவிடும் – ஜீயர் சடகோப ராமானுஜர்

ஓம் நமோ நாராயணாய சொன்னால் கொரோனா ஒடிவிடும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 99 லட்சத்து 12 ஆயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 97 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 53 லட்சத்து 62 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக வல்லரசு நாடான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 5 லட்சத்தை கடந்தது ….!!

இதுவரை இல்லாத புதிய உச்சமாக தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் இன்று ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில்கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.

Categories

Tech |