மத்திய அரசு வழிகாட்டுதலின்படியும்,நீதிமன்ற உத்தரவின் படியும் மத ஊர்வலங்களை மேற்கொள்ளாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தார். அத்துடன் மேலும் அவர் கூறியதாவது: வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2609 காய்ச்சல் முகாம்கள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு நடத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3350 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]
