அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் கொளந்தானூரில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதை மேற்பார்வையிட்டார். இதன் பின்னர் குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்தி பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ஒரு நாளைக்கு தமிழகத்திற்கு 16 ஆயிரம் மெகாவாட் மின் தேவைப்படுகிறது. ஆனால் இதில் கடந்த ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 22% மட்டுமே. இதனால் தமிழக அரசானது மத்திய […]
