வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி வரும் பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள், […]
