நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 லட்சம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு (10.12.2021) அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. அவ்வகையில், நவிமும்பைத் தமிழ் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
