புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டு தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி ஆளுநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கிரண்பேடி அவசரஅவசரமாக நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தரராஜன் அவருடைய இடத்தில் நியமிக்க்கப்பட்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து நாராயணசாமி அரசுக்கும் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸின் பலம் 14 ஆக குறைந்தது. […]
