சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் தமிழரசி எம்.எல்.ஏ. ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தமிழரசி எம்.எல்.ஏ. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வின்சென்ட் நகர், காந்திஜி நகர் பகுதியில் நேற்று 125 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். […]
