இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற பல்வேறு இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இலங்கை கடற்படையினரால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
