தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் […]
