தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 5 அமைப்பினர் இயங்குவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளை தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தில் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய உளவுத்துறை சமூகவலைதள கணக்குகளின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக உளவு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக உளவுத்துறை காவல்துறையினர் தமிழர்களுக்கு தலிபான்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் உளவுத்துறையினர் தமிழ்நாட்டில் உள்ள […]
