தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக பாதிப்பு 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 54,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,279 பேர் ஆண்கள் ஆவர். 836 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 33,520 (61.56%) பேர் ஆண்கள், 20,909(38.40%) […]
