நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் 1862 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சென்னை […]
