Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அலையை ரசிக்க…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்….!!

விடுமுறை தினத்தையொட்டி தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 ஆண்டுகளுக்கு பிறகு…. அரிச்சல்முனையில் உருவான மணல்பரப்பு…. ஆர்வத்துடன் வரும் சுற்றுலாவினர்….!!

அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி மணல் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வெறும் மணல் பரப்பாக இருந்து வந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மணல் பரப்பில் நடந்து சென்று கடல் அழகை ரசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கடல் அலையின் வேகத்தால் அப்பகுதியில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதியில் […]

Categories

Tech |