தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன் இறங்குதளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. […]
