தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோதண்டம் வேலைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி […]
