திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் பழனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு […]
