தனிமைப்படுத்துதல் வார்டின் நாலாவது மாடியில் இருந்து ஒரு பெண் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த வார்டு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே வார்டில் மதுரவாயில் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 48 வயதான செல்வி என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் திடீரென்று நேற்று மாலை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். […]
