தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகள் குறித்த டிஜிட்டல் தனி உரிமையை பாதுகாக்க வகைசெய்யும் தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையிலிருந்து மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழு வழங்கிய பரிந்துரையின்படி ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைகளுக்கு பொருந்தும் விதமாக புது மசோதாவை கொண்டுவர அரசு முடிவு செய்து இருப்பதால் இந்த மசோதாவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருக்கிறார். இந்த மசோதாவை மிக விரிவாக பரிசீலித்த நாடாளுமன்ற […]
