தந்தை-மகன் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நொச்சிகுளம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யாத்துரையின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]
