குழந்தை தனது சாயலில் இல்லாததால் சந்தேகமடைந்த தந்தை பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்-சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பார்த்து, ராஜீவ் தனது முக சாயலில் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். அதன்பின் சிவரஞ்சனி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு வாரம் கழித்து மனைவியின் தாய் வீட்டிற்கு வந்த […]
