சொத்து தகராறில் மகன் தந்தையை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்டிசாலை பகுதியில் பொங்கியான்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டதால் பேரனான மகேஷ் என்பவருடன் பொங்கியான் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக பொங்கியானுக்கும், நாகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நாகராஜ் தனது தந்தையை சந்தித்து சொத்தை பிரித்து […]
