மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான ராஜி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்த்திக்(38) என்ற மகன் உள்ளார். இவர் கோழி வண்டி லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தந்தை மகனுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. […]
