பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியிருப்பதாவது, அந்தியூர் பகுதியில் செயல்படுகின்ற பங்குகளில் தான் நாங்கள் பெட்ரோல் போடுகின்றோம். ஆனால் பெட்ரோல் போட்ட சிறிது நேரத்தில் வாகனங்கள் நின்று விடுகின்றன. உடனே சம்பவ இடத்திற்கு மெக்கானிக்கை வரவழைத்து சரி பார்த்தால் […]
