ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 மாதங்களாக குத்தகைக்கு எடுத்தவர் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த மழை காரணமாக பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏரியில் நீர் […]
