கடலூரில் அமைக்கப்பட்ட முகாமில் உணவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாமில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு பன்னிரண்டரை மணி […]
