தட்டிக் கேட்ட 2 வாலிபர்களை மது பாட்டிலால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமாரபன்னையூர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரி சிவா என்ற மகன் இருக்கின்றார். இவர் ஆத்தூர் பகுதியில் உள்ள பஜாரில் அரிசி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் மாரி சிவா தனது கடையில் விற்பனை செய்து கொண்டிருக்கும்போது செல்வம்புதியனூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அரிசி வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். […]
