இத்தாலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், […]
