Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்…. அரசுக்கு விவசாயிகள் விடுக்கும் முக்கிய கோரிக்கை…..!!!!

கள்ளக்குறிச்சியிலிருந்து வரும் மணிமுக்தாறு கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம் வழியே சென்று சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாற்றூர் அருகில் வெள்ளாற்றில் கலந்து வருகிறது. இந்த ஆறு வாயிலாக பெரும்பாலான ஏரிகள் தண்ணீர் பெற்று, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பருவ மழை காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்கும் அடிப்படையில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. அதன்படி விருத்தாசலம் அருகில் பரவலூர் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முன் மணி முத்தாற்றின் குறுக்கே 15கோடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை” முல்லைப் பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!

தொடர் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகளுக்கும், ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வீரபாண்டியில் உள்ள தடுப்பணையிலும் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

1000 தடுப்பணைகள் கட்டப்படும்….. அமைச்சர் துரை முருகன் உறுதி….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர்நிலைகளில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

17 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி, அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரட்சி மாவட்டமாக கருதப்படும் சிவகங்கை மாவட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்த பிளஸ்-1 மாணவன் பலி…. திருச்சி அருகே சோகம்….!!!

நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பெரிய கடைவீதி ஜின்னா தெருவை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அப்துல் ரகுமான் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் திருச்சி அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.  4 பேரும் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அப்துல் ரகுமான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மாதங்களுக்கு முன்புதான் கட்டினோம்…. அதற்குள் நிரம்பி வழிகிறது…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம், எல்லைக்கிராமம் மற்றும் எக்கட்டாம்பாளையம் போன்ற ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதியன்று தடுப்பணை கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 15 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் தண்ணீர் வேண்டும்… நூதன முடிவு… சிக்கிய வாலிபர்கள்..!!!

தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் திருப்ப தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்கள் காவல்துறையினரிடம் சிக்கினார்கள்.  திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்காக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை நிரம்பவில்லை. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், சாமியார் ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன்பட்டி […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் 6128 சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.269.82 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது… முதல்வர் பேட்டி!!

கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை தமிழக அரசு முறையாக அமல்படுத்தியதால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆலோசனைகளை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். […]

Categories

Tech |