உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள துண்டலா-கன்பூர் சென்று கொண்டிருந்த 24 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பியாபூர்-ருசா ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் சரக்கு ரயில் காலியாக இருந்ததால் […]
