தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவில் கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. இந்த சதயவிழாவையொட்டி கலெக்டர் கோவிந்தராவ் மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் தேவாரம், திருமுறை பாடி […]
