Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உரசிய மின்கம்பி” பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டம்….!!

லாரியில் ஏற்றிச் சென்ற வைக்கோலில் மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள வைக்கோலை வியாபாரிகள் எந்திரம் மூலம் கட்டி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இளங்காடு பகுதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச்சென்ற லாரியானது தாழ்வான பகுதியில் இருந்த மின் கம்பியின் மீது உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தப்பு செஞ்சா இப்படித்தான்” குண்டர் சட்டத்தில் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பாரதி மீது பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. இதனால் பாரதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் வழக்கு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் பாரதியை கைது செய்யுமாறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்கவே மாட்டோம்” எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

சாலையோர கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வியாபாரிகள் மற்றும் தி.மு.க-வினர் அதனை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்களும், கிழக்குப்பகுதியில் இரண்டு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர பழக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாநகராட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் வேலை…. மடக்கிபிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்ற கற்பகம் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாரபட்சம் வேண்டாம்” விவசாயிகளின் போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட அதற்கான விலையில்லா உரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பெயரில் திருவோணம் வட்டார விவசாயிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களாக விலையில்லா உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இடையங்காடு, திப்பன்விடுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு விலையில்லா உரங்களை வழங்க பாரபட்சம் காட்டப்படுவதால் திருவோணம் வட்டார விரிவாக்க வேளாண்மை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மிகவும் பழமை வாய்ந்தது” நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவல நிலை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமன்றி புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வசிப்பவர்களும் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருப்பதால் ஏழை எளிய மக்கள் விரும்பி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காலத்தில் புற நோயாளிகளின் வருகை குறைவாகவே இருந்தது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காற்றின் தீவிர வேகம்”10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

குடிசை வீடுகளில் பற்றி எரிந்த தீயால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் இருக்கும் மூங்கில் கொல்லையில் கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் செந்தில், செல்வம் ஆகிய இருவரின் குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்துள்ளது. இதனால் அவர்களின் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமாகியது. மேலும் வேகமாக தீ பரவியதால் அடுத்தடுத்து இருந்த அந்தோணிசாமி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தவறாக கூறிய வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தஞ்சையில் பரபரப்பு….!!

முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 1 1\2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவர் சுகன்யாவை மோட்டார்சைக்கிளில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி கொண்டுபோய் விட்டுள்ளார். இந்நிலையில் சோழபுரம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தோட்டக்கலை பண்ணைக்கு வேலைக்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியில் தோழப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 30  வருடங்களாக அதே பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோழப்பன் தோட்டக்கலை பண்ணைக்கு வழக்கம் போல் இரவு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் தோட்டக்கலை பண்ணையில் வேலை செய்ய வந்தவர்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தோழப்பன் இறந்து கிடந்ததை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அந்த காலத்தில் இருந்தே இருக்கிறோம்” பொதுமக்களின் கோரிக்கை….உறுதியளித்த அதிகாரிகள்….!!

தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் ஏரியானது மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குளம் போல் காட்சி அளித்த இந்த ஏரியானது தற்போது சுருங்கிக் கொண்டே வருகின்றது. மேலும் ஏரியின் நடுவே நான்கு வழிச் சாலை போடப்படுவதால் ஏரியானது இரண்டு பகுதியாக காணப்படுகின்றது. இந்த ஏரியின் மறு கரையில் அருள்மொழிபேட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 28 குடும்பங்கள் 300 ஆண்டுகளாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்…. லாரி டிரைவர்கள் சாலை மறியல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டுவந்த அரசு மணல் குவாரி மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மணல் குவாரியை மூடியதால் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம்  மணல் அள்ள அனுமதி தருமாறு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் மணல் ஏற்றி  3  லாரிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் தென்னம்மநாட்டிலுள்ள கோவிலில் மின்சார விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரசேகரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலுள்ளவர்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணிங்க…. மீனவர் எடுத்த விபரீத முடிவு…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

மன அழுத்தத்தால் மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் மீனவரான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரவிச்சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அம்சவள்ளி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கரையூர் தெருவில் வசிக்கும் மாரிமுத்து என்பவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு அவரது படகில் சுந்தர்ராஜ் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபனுக்கும் மன்னார்குடியை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் பார்திபனின் வீட்டில் உள்ளவர்கள் இலக்கியாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த பார்த்திபன் தனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்களின் கோரிக்கை” தமிழக அரசின் அறிவிப்பு…. வாசகர்கள் மகிழ்ச்சி….!!

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊடரங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நூலகங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நூலகத்தை திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி தமிழகம் முழுவதும் நூலகங்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 6 மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

புதுமாப்பிள்ளை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவிக்கு  இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பாலகிருஷ்ணன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி செஞ்சிட்டாரு…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. மோதிக்கொண்ட இருதரப்பினர்….!!

குடும்பத் தகராறில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மன்னார்குடி பகுதியில் வசிக்கும் செந்தமிழ்செல்வனின் மகளான இலக்கியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இலக்கியாவை அவர்களது உறவினர் வடுவூரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் காற்று வருது…. வியாபாரிக்கு நடந்த சோகம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

மாடியிலிருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் வியாபாரியான சாகுல்ஹமீது மற்றும் லியாகத் அலி என்ற இரு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை பகுதியில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் 2 – வது மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து சாகுல்ஹமீது காற்று வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விடுதி மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வறட்சி பகுதியாக இருக்கும் நெய்வேலி பகுதிக்கு காவிரி தண்ணீர் செல்வதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள அக்னியாறு குடிநீர்த்தேவை மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுவதால் முக்கிய நீராதாரமாக உள்ளது. இதனையடுத்து அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் அக்னியாற்றில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை சரி செய்து தாங்க…. அவதிகுள்ளான பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

குடிநீர் குழாயில் அசுத்த நீர் தேங்கியதால் அதை சீரமைக்க பக்தர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் பகுதியில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோவிலில் முடி காணிக்கை செலுத்துதல், பால்குடம் எடுத்தல், உயிர் கோழி விடுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இதனையடுத்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் அந்த கோவிலில் உள்ள குடிநீர் குழாயில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரு காகத்தால்…. பற்றி எறிந்த குடிசைகள்…. தஞ்சையில் பரபரப்பு….!!

ஒரு காகத்தால் 3 குடிசைகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பாநகர் பகுதியில் சுந்தரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் சுந்தரம் குடிசை வீட்டின் அருகிலுள்ள உயர் மின்அழுத்த கம்பியில் நிறைய காகங்கள் அமர்ந்திருக்கும். இந்நிலையில் உயர் மின்அழுத்த கம்பியில் வழக்கம்போல் ஏராளமான காகங்கள் அமர்ந்திருந்தன. அப்போது திடீரென மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கி ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்க மாட்டோம்” எதிர்ப்பாளர்களின் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்….!!

ரயில் வழித்தடத்தில் கிராசிங் கேட்டை அகற்றி கீழ்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யனார்புரம் பகுதியில் தஞ்சை-திருச்சி இரயில் வழித்தடத்தில் உள்ள கிராசிங் கேட்டை அகற்றி கீழ் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளரான முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க ஒன்றிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஈகை திருநாள்” மகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்…. தஞ்சாவூரில் கோலாகலம்….!!

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆடுகளை அதிகமாக வாங்கிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனை ஈகை திருநாள் என்றும் கூறுவர். இந்நிலையில் பெருநாளன்று இஸ்லாமியர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பாணியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து நண்பர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு ஒரு பங்கையும், உறவினர்களுக்கு ஒரு பங்கையும், கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களுக்காக பயன்படுத்துவார்கள். மேலும் இந்தத் திருநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிவதும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உரிய அனுமதி பெறவில்லை” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் விசாரணை….!!

அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபர்களை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்கவே மாட்டோம்” பாதிக்கப்படும் தொழில்….கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு….!!

மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர்கள், மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீன்வள மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதனையடுத்து மீனவர்கள் குறிப்பிட்ட வகையான மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு காக்கையால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!!

காக்கையால் மூன்று குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து, இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில், காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன. அப்போது ஏற்பட்ட மின் உராய்வில் காக்கையொன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளது. தூக்கி வீசப்பட்ட காக்கை எரிந்த நிலையில் அருகில் இருந்த குடிசை வீட்டின் மேற்கூரையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எப்போது அதைச் செய்வார்கள்…? பொதுமக்களின் எதிர்பார்ப்பு…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

நாடியம்மன் கோவிலின் ஏரியை தூர்வார வேண்டி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் ஏரியானது மிகுந்த வறட்சி காரணமாக தாமரைக் கொடிகள் ஆகியவை படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் என்ன செய்ய போறோம்…. பாதிப்படைந்த தொழில்…. வேதனையில் வாடும் தொழிலாளர்கள்….!!

கருவாடு விற்பனை தொழில் பாதிப்பட்டதால் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளாக்கி தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மற்றும் கிராம பகுதிகளில்  உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கருவாட்டு சந்தைகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா பரவல் தொற்று குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 லட்ச ரூபாய் மதிப்பு…. வசமாக சிக்கிய மூவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இல்லைன்னு சொன்னது தப்பா…. வாலிபரின் வெறிச்செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது பாருக் கண்டியூரில் ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவர் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது இளையராஜா உணவு கேட்ட போது முகமது பாருக் இல்லை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனதை உலுக்கிய கொடூர சம்பவம்…. 17 ஆண்டுகளை கடந்தது…!!!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பள்ளியிலிருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியான துயர சம்பவம் நடந்த நாள் இன்று. அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்லாமல், அனைவருடைய நெஞ்சையும் உலுக்கியது. இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் அந்த பள்ளியின் முன்பு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூடி, குழந்தைகளின் உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் விட்டு அழுதனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதை அனுமதிக்க மாட்டோம்…. எதிர்ப்பாளர்களின் போராட்டம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரான மணியரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் வைகரை இந்த போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் கர்நாடகாவில் புதிதாக அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்…. சந்தையில் குவிந்த மக்கள்…. காவல்துறையினரின் அறிவுரை….!!

கொரோனா விதிமுறைகளை மறந்து மீன் சந்தையில் அதிகப்படியான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் இருக்கும் மீன் சந்தை கொரோனா தொற்று  காரணமாக பல நாட்களாக திறக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறக்கப்பட்ட கீழவாசல் மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்…? கடையில் தொங்கிய சடலம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வயிற்று வலி காரணமாக கார் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளத்தான்மனை கிராமத்தில் இளஞ்செழியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கார் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது கடையில் இளஞ்செழியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்கும் போது…. வலையில் சிக்கியது என்ன….? வேதனையில் வாடும் மீனவர்கள்….!!

கடல் ஆக்குகள் அதிகமாக சிக்குவதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப் படகுகள் மூலம் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, தரகர் தெரு, மறவக்காடு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கடலில் கிடைக்கும் நண்டுகள், இறால்கள் மற்றும் பல வகையான மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒப்பாரி வைத்து போராட்டம்…. காவல்துறையினரின் எச்சரிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், நற்பணி மாவட்ட செயலாளர் தரும சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநிலச் செயலாளர் சிவ. இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்ட…. அதுக்கு இப்படி பண்றாங்க…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருதகுடி நெல்லப்பன்பேட்டை பகுதியில் நவதானிய வியாபாரியாக பழனிசெல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பக்கத்து கிராமங்களில் மணிலா வாங்கி வந்து சின்னசேலத்தில் ஆயில் மில் நடத்திவரும் நைனார்பாளத்தை சேர்ந்த பெரியசாமியிடம் கொடுத்து வருகின்றார். அதன்படி பழனிசெல்வத்துக்கு 1 கோடியே 5 லட்சம் பாக்கியை பெரியசாமி தரவேண்டியது இருந்தது. இதனால் கடந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உதவி கேட்டதற்கு இப்படியா….?அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்….!!

பெண்ணை ஏமாற்ற முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேவப்ப நாயக்கன் வாரி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி பணம் எடுப்பதற்காக தஞ்சாவூர் மிராசுதார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனக்கு பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த வாலிபர் ராஜலட்சுமியிடமிருந்து ஏ.டி.எம் கார்டையும் ரகசிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட குவிந்த கூட்டம்….காற்றில் பறந்தன சமூக இடைவெளி….கொரோனா பரவும் அபாயம்….!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி கொள்ளுமாறு கூறப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் இன்று பொதுமக்கள் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம் … கோர விபத்தில் பறிபோன உயிர்… மகனின் பரபரப்பு புகார்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில்  கிராம நிர்வாக அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தென்வெட்டுகாரப் பகுதியில் செந்தில் வடிவேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து செந்தில் வேலன் இருசக்கர வாகனத்தில் பாபநாசம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த காரானது செந்தில் வேலனின் இருசக்கர வாகனத்தின் மீது  மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஏற்கனவே சொல்லிட்டோம்… பறிபோன மாணவன் உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி 9 – ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 – ஆம் வகுப்பு படிக்கும் அகிலன் என்ற மகன் இருந்துள்ளான். அகிலனுக்கு 2 சகோதரிகள் இருக்கின்றனர். இந்நிலையில் அகிலன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள வயல் வெளியில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளான். இதனையடுத்து வயலில்படும்படி உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக தொங்கியுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அவள் உயிருக்கே ஆபத்து… பெண்ணுக்கு நடந்த கொடுமை… சகோதரரின் பரபரப்பு புகார்…!!

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது தங்கையை மீட்டுத் தருமாறு சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தன் தங்கையை மீட்டுத் தருமாறு காவல் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறப்பட்டதாவது, தனது சகோதரியான சுந்தரி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் 2019 – ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இப்படி பண்ணியிருக்கான்… சடலமாக கிடந்த உரிமையாளர்… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியினருக்கு பிரியங்கா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டுக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவரின் மகனான சந்தோஷிற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.  இதனை அடுத்து சந்தோஷுக்கு தன்னை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்க ஒரே இருட்டா இருக்க… அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…

தஞ்சாவூரில் உள்ள மிக முக்கியமான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 14 மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் மட்டும் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது.  இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து அந்த வழி சாலையில் வரும் பொதுமக்கள், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் சேர்க்கும்…. மாணவரின் பெற்றோருக்கு ரூ.10000 ஊக்கத்தொகை…. செம சூப்பர் திட்டம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆல்பாஸ்  செய்யப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள கிராமம்  ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் போதிய அளவு மாணவர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ராட்சத அலையால்… மீனவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

ராட்சத அலையில் சிக்கி மீட்கப்பட்ட 2 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் சக்திகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திகுமார் தனக்கு சொந்தமான படகில் பாஞ்சாலன், முருகேசன், நாகூர் பிச்சை, நந்தகுமார் ஆகியோருடன் மீன்பிடிப்பதற்காக கோடியக்கரை கடல் பகுதியை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து மீன் பிடித்து விட்டு கரையை நோக்கி  திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட  ராட்சத அலையால் இவர்களின் படகு தண்ணீரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1 1/4 கிலோ… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் செயல்…!!

காரில் 2 லட்சம் மதிப்புடைய கஞ்சா கடத்தி சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செட்டிமண்டபம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பத்தடி பாலம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1  1/4 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கொரோனா தொற்று பாதிப்பினால் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத்தெரு பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மாரிமுத்துவின் மகன் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு மாரிமுத்து மற்றும் இந்திராணி ஆகிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்… நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை… அதிகாரிகளின் முடிவு…!!

விளை நிலங்களில் எண்ணெய்  குழாய் பதிப்பதற்கான இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாய விளை நிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

யாருமே வாங்க வரல… சிரமப்படும் விவசாயிகள்… அரசாங்கத்திற்கு கோரிக்கை…!!

ஊரடங்கு காலத்தில் பூசணிக்காய் வாங்க வியாபாரிகள் முன்வராத காரணத்தினால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடவாளம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் பூசணிக்காயை  சாகுபடி செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் கலியன் என்ற விவசாயி தனது நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக் காய்களை அதிக விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சமையலுக்காகவும், திருஷ்டிக்காகவும் அனைவரும் […]

Categories

Tech |