மளிகை கடைக்கு பொருள் வாங்குவது போல் வந்த இரண்டு நபர்கள் பெண்ணிடம் 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நிலையில் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையை அடுத்த உள்ள காஞ்சிக்கோவில் காந்திநகரை சேர்ந்த முத்தாயம்மாள் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 08.30 மணி அளவில் கடைக்கு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின் அவர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டிருக்கின்றனர். […]
