டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்ற போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததால் […]
