குடிமங்கலம் அருகே வேன் ஆட்டோ மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சேர்ந்த மாசாணம் என்பவர் ஒட்டன்சத்திரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றுக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூருக்கு செல்வதற்காக தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக வேன் ஒன்று 11 பேர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டமடம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி […]
